நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை..!

Read Time:2 Minute, 16 Second

மகிந்த ராஜபக்ச அரசின் தூதராக செயல்படும் நடிகை அசின், நடிகர் விவேக் ஓபராய் உள்ளிட்டோருக்கு தமிழ் திரையுலகம் தடைவிதிக்க வேண்டும் என தமிழ்நாடு, மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கபடி மாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத் தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைதுசெய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நாம் தமிழர்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்மீதான வழக்குகளை வாபஸ்பெற்று விடுதலை செய்யவேண்டும். மீனவர் செல்லப்பன் கொலையை நியாயப்படுத்திய தென்னிந்திய கடலோர கடலோரக் காவல்படை கமாண்டர் ராஜசேகரை கண்டிக்கிறோம். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய கடற்படையை கண்டிக்கிறோம். மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து இலங்கை திரைப்பட விழாவிற்கு தடைவிதித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நன்றி தெரிவிக்கிறோம். மகிந்த அரசின் விளம்பர தூதர்களாக செயல்படும் நடிகை அசின், விவேக் ஓபராய் மற்றும் இந்திய படவிழாவில் பங்கேற்ற திரைப்படங்களுக்கு திரைப்பட சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிரிக்கெட் வரலாற்றில் எவராலும் சாதிக்க முடியாத சாதனையை நிலைநாட்டிவிட்டு முரளி ஓய்வு..!
Next post ஆளும் கட்சியில் இணையப்போவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை-விஜயகலா மகேஸ்வரன் எம்.பி…!