எம்.வி. சன் ஸீ கப்பலில் வந்த அகதிகளுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் ஆரம்பம்..!
Read Time:1 Minute, 21 Second
கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ள இலங்கையர்களுக்கான குடியுரிமை வழங்குவது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைள் நேற்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களை அடையாளம் காணல்இ வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகளை அடுத்து இலங்கை அகதிகள் தமக்கு அகதி அந்தஸ்த்து வழங்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆரம்பக்கட்ட பணிகள் எதிர்வரும் ஒரு வார காலப்பகுதிக்கு நடைபெறும் என கூறப்படுகிறது. இதேவேளை தற்போது வரையில் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்ட சிலர் வன்குவார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகின்ற நடவடிக்கைகள் நாளை முதல் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
Average Rating