வைரமுத்து மகன் திருமணம் – முதல்வர் கருணாநிதி நடத்துகிறார்..!
கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது மகன் கபிலனின் திருமணத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி வைக்கிறார். வைரமுத்துவின் மகன் கபிலனுக்கும், மதுரையை சேர்ந்த ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவர்களது திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம்தேதி நடைபெறுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கபிலன் – ரம்யா திருமணத்தை நடத்தி வைக்கிறார். மணமகன் கபிலன், வெளிநாட்டில் படித்திருந்தாலும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியாக பணியாற்றி வருகிறார். நான்கு கவிதை தொகுதிகள், ஒரு சிறுகதை தொகுதி, தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்ட நாவலையும் எழுதியிருக்கிறார். தற்போது அச்சிலிருப்பவை, பூமரேங் பூமி என்ற நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பு, மற்றும் இவர் எழுதிய நூறு கவிதைகளின் தொகுப்பு. புது மனைவி வந்தபின் இவற்றை வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. மணமகள் ரம்யா, மருத்துவ உயர் கல்வியில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பதுடன் புகழ் பெற்ற மகப்பேறு மருத்துவராகவும் இருக்கிறாராம். இப்போதே கல்யாண களை கட்டிவிட்டது கவிஞரின் வீட்டில்.
Average Rating