நெடுஞ்சாலைகள் செயலகத்துக்கு அடிக்கல் நட்டினார் ஜனாதிபதி..!
Read Time:1 Minute, 6 Second
நாட்டில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி மேம்பாட்டுக்காக பத்தரமுல்லை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் நெடுஞ்சாலைகள் செயலாளர் நாயக செயலகத்துக்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை நட்டினார். இத்திட்டத்திற்கு 132 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட 150 மில்லின் ரூபா நிதியூதவியின் ஒரு தொகுதியை இதற்கு ஒதுக்கவூம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது. இன்று நடைபெற்ற இந்த வைபவத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன – விமல் வீரவன்ச – சுசில் பிரேம ஜயந்த மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Average Rating