மகன் பெயரை முதுகில் பச்சை குத்திய அன்புத்தாய்..!
Read Time:1 Minute, 4 Second
காதலர் அல்லது காதலி பெயரையோ, கணவன் அல்லது மனைவி பெயரையோ பச்சை குத்துவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மகன் பெயரை பச்சை குத்திய கதை நமக்கு சற்று புதிதுதான்.அந்தப் பாசமான தாய் வேறு யாருமல்ல மாளவிகாதான். தனது அன்பு மகன் ஆரவ் மேனனின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தியுள்ளாராம். ஆரவ் குட்டிக்கு இப்போது ஒன்றரை வயதாகிறதாம். அடுத்த குழந்தைக்கும் தயாராகியுள்ள மாளவிகா அந்தக் குழந்தையை டிசம்பர் மாதம் பெற்றெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மாளவிகாவுக்கு தனது மகன் மீது கொள்ளைப் பிரியம், அன்பாம். இதனால் அவனது பெயரை தனது முதுகில் பச்சைக் குத்திக் கொண்டு அதை வெளிப்படுத்தியுள்ளாராம்.
Average Rating