வங்க தேச கடலில் படகு கவிழ்ந்து பலர் சாவு
Read Time:54 Second
வங்கதேச கடலில் வியாழக்கிழமை படகு கவிழ்ந்ததில் பலர் இறந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து 216 கி.மீ. தொலைவில் உள்ளது சிட்டகாங். சாண்விப் தீவுப்பகுதியிலிருந்து சிட்டகாங்குக்கு சென்ற படகில் 70 பேர் பயணம் செய்தனர். அப்போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்தது. இதில் பலர் கடலில் மூழ்கினர். இதுவரை மூன்று பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
கடல்பரப்பில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. அதிவிரைவு படகுகள் மூலம் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. போலீஸôர் மற்றும் மீனவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.