சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..!

Read Time:1 Minute, 51 Second

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ்-முஸ்லிம் மக்கள் குறித்தே அனைவரும் சிந்திப்பதாகவும், ஆனால் இடம்பெற்ற யுத்தத்தினால் 1 லட்சத்து 65 ஆயிரம் சிங்கள மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களே தற்போது யாழ். ரயில் நிலையத்திலும், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்திலும் நிலைகொண்டு தமது உரிமைகளுக்காகப் போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகையால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள சிங்கள மக்களை உடனடியாக அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும், இதற்காக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இந்த நாடு சகலருக்கும் சொந்தமானது எனக் குறிப்பிட்ட அவர், சிங்கள மக்கள் எங்கும் சென்று வாழ்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும-ஜாதிக ஹெல உறுமய..!

  1. போடா பன்னி சிங்களவன் தமிழ் நிலத்தில் கால் வைத்தால் தலை நிலத்தில் உருளும்

Leave a Reply

Previous post மிளகாயைச் சுவைத்து உண்ணும் அதிசய குழந்தை..!
Next post கடல் அசுத்தங்களை சுத்தமாக்க ரோபோ மீன்..!