முன்னாள் புலி உறுப்பினர்கள் 500 பேர் இன்று விடுதலை..!
Read Time:57 Second
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 500 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே இந்த உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 300 பேர் பெண்களும் 200 பேர் ஆண்களும் ஆவர். இதுவரை மொத்தமாக 4500 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் 6000 பேர் வரை விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ஏனையோர் தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை என்றவாறு விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Average Rating