புலிகளின் சர்வதேச வலையமைப்பு உறுப்பினர்கள் இன்னமும் இயங்கி வருகின்றனர்–சரத் வீரசேகர..!
Read Time:1 Minute, 22 Second
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த சிரேஸ்ட உறுப்பினர்கள் இன்னமும் இயங்கி வருவதாக முன்னாள் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், இயக்கத்தின் பணிகளை மீள ஆரம்பிக்க சர்வதேச அளவில் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு சவாலையும் வெற்றிகொள்வதற்காக சக்தி காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, திகாமடுல்ல பிரதேசத்தில் அரசாங்கம் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating