அரைகுறை ஆடையுடன் ஸ்ரேயா-நசுக்கிய ரசிகர்கள்..!
Read Time:2 Minute, 1 Second
‘சிவாஜி’ படத்தில் ரஜினி ஜோடியாகி முன்னணி நடிகையானார் ஸ்ரேயா. தற்போது ஆர்யாவுடன் ‘சிக்கு புக்கு’ ஜீவாவுடன் ‘ரவுத்திரம்’ படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொது இடங்களில் மிக மிகக் குறைச்சலான உடையில் தான் வருவேன், என்று நடிகை ஸ்ரேயா சபதம் எடுத்துள்ளார் போல் உள்ளது. சென்னையில் உள்ள வணிக வளாகமொன்றில் இச்சம்பவம் நடந்தது. பிரபல கைகடிகார நிறுவனமொன்று தங்கள் கடிகாரத்தை அறிமுகம் செய்ய ஸ்ரேயாவை அழைத்து இருந்தது. ஸ்ரேயாவை காண பெருங்கூட்டம் கூடியது. விழாக்குழுவினர் அவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை. ஸ்ரேயா ரசிகர்களை கட்டுப்படுத்த முயற்சித்தார் முடியவில்லை. அவர்கள் நெருக்கித் தள்ளியபடி ஸ்ரேயாவை சூழ்ந்தனர். கூட்டத்தினர் மத்தியில் ஸ்ரேயா சிக்கிக் கொண்டார். கையை பிடித்து இழுக்கவும் கிள்ளவும் சிலர் முயன்றனர். அவர்கள் பிடியில் ஸ்ரேயா தவித்தார். ஒரு வழியாக விழா அமைப்பாளர்கள் ரசிகர்களை தள்ளி விட்டு ஸ்ரேயாவை மீட்டனர். அதிர்ச்சியில் இருந்து மீளாத ஸ்ரேயா விழாவை பாதியில் முடித்துக்கொண்டு வெளியேறினார். ஏற்கெனவே சிவாஜி பட விழா, கந்த சாமி பட விழாக்களில் அறைகுறை உடையோடு மேடையேறி ‘தமிழ் கலாச்சாரக் காவலர்களின்’ கடும் கண்டனத்தைச் சம்பாதித்துக் கொண்டவர் ஸ்ரேயா!
Average Rating