விடுதலைப் புலிகளுடன் தொடர்பை பேணிய மூவர் தலவாக்கலையில் கைது..!

Read Time:1 Minute, 18 Second

தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் ஒருவரையும், அவருடன் தொடர்புடைய இருவரையும் மத்திய மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் இன்று நுவரெலியா தலவாக்கலை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கண்டியில் அமைந்துள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் சில தினங்களுக்கு முன் தலவாக்கலை பிரதேசத்தில் பெரும் தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர். இதனுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து இரண்டு ரீ.56 ரக துப்பாக்கிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கைது சைய்யப்பட்ட சந்தேக நபர்கள் சம்பந்தமாக மேலதிக விசாரணைகளை மத்திய மாகண பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
Next post மெனிக்பார்மில் நீர்வளம் மிக்க செழுமையான பகுதியில் இராணுவ முகாம்..!