மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கம்..!
Read Time:1 Minute, 12 Second
மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுத் திட்டங்களை வழங்குவதற்காக இந்த விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த விசேட தொலைபேசி மையம் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1919 என்ற விரைவு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது குறைகளை அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நவீன தகவல் தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி இந்த மையம் இயங்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating