மலையக மக்கள் முன்னணி, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது..!

Read Time:2 Minute, 13 Second

மலையக மக்கள் முன்னணி, தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அறிவித்துள்ளது. சாந்தினி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் தற்போது ஒன்பது அரசியல் கட்சிகள் அங்கம் வகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக இரண்டு வாரங்களுக்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைந்து கொள்ள விரும்புவதாக மலையக மக்கள் முன்னணி கோரியதாக முன்னாள் பிரதி அமைச்சரும், கட்சியின் தேசிய அமைப்பாளருமான பெ.ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மலையக மக்கள் முன்னணியை தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளுமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு இன்றைய தினம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தைகளை தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடும்பங்கள் மீள் குடியேறுவதற்கு காணிகள் வழங்கப்படவில்லை என முறைப்பாடு..!
Next post அரசாங்கத்திற்கு எதிரான இணைய தளங்களை முடக்குவதற்கு திட்டம்..!