தமிழ் அரசியல் சிறைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்-டாக்டர் ஜயலத்..!
Read Time:1 Minute, 23 Second
தமிழ் அரசியல் சிறைக் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். இன்று மகஸின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் சிறைக்கைதிகளைப் பார்வையிட அவர் அங்கு விஜயம் செய்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மகஸின் சிறையில் உள்ள சிறைக்கைதிகள் அனைவரையும் பார்வையிட சிறைச்சாலை அதிகாரி அனுமதி வழங்கவில்லை. ஐந்து பேரை மாத்திரமே அனுமதித்தனர். 76 சிறைக்கைதிகள் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை குறித்து சிறைச்சாலை ஆணையாளருடன் பேசியுள்ளேன். குற்றஞ்சாட்டப்படாதவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஏனையோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்” என்றார்.
Average Rating