இலங்கையில் இளம் காதலர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன..!
Read Time:1 Minute, 17 Second
இளம் காதலர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் பேரவையின் தலைவர் லலித் பியூம பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பது மாகாணங்களில் விசேட பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தியவன்னா ஓய பிரதேசத்தில் காணப்படும் ஏழு ஏக்கர் பரப்பில் மேல் மாகாணத்திற்கான காதலர் பூங்கா உருவாக்கப்படவுள்ளது. இளம் காதலர்களுக்கு காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இடையூறு ஏற்படுத்தி வருவதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இசை நிகழ்வுகள் மற்றும் ஏனைய பொழுது போக்கு அம்சங்களும் இந்த பூங்காவில் காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், காதலர்கள் இந்தப் பூங்காக்களில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
Average Rating