தீபாவளி தினமன்று சகல மதுபான சாலைகளையும் மூடுமாறு அகில இலங்கை இந்து காங்கிரஸ் ஜனாதிபதிடம் கோரிக்கை..!

Read Time:1 Minute, 29 Second

எதிர்வரும் தீபாவளி தினமன்று சகல மதுபான சாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், அகில இலங்கை இந்து காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மதுபான சாலைகள் மட்டுமன்றி இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு இந்து காங்கிரஸ், ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரியுள்ளது. தீபாவளி இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும் எனவும், இந்த முக்கியத்துவத்தை அறிந்த கொண்ட காரணத்தினால் அரசாங்கம் தீபாவளி தினத்தை பொது மற்றும் வங்கி விடுமுறையாக அறிவித்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், தீபாவளி தினமன்று பூஜை வழிபாடுகளை இலவசமாக தொலைக்காட்சி சேகைள் ஒளிபரப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி அதற்கான உத்தரவினை பிறப்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் இளம் காதலர்களுக்காக பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன..!
Next post விற்பனைக்கு வருகிறது கூகுளின் ‘குரோம் நெட்புக்’..!