சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக ஐ.நா 14 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி..!

Read Time:1 Minute, 6 Second

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தித் திட்டம் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி உதவியாக வழங்கவுள்ளது. புனர்வாழ்வு அளிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கல்வி, தகவல் தொழில்நுட்ப பயிற்சி, தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. சிறைச்சாலைகள் அமைச்சர் டியூ.குணசேகரவினால் முன்வைக்கப்பட்ட திட்டத்திற்கு அமைய புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீதியோர விளக்குகளில் சி.எப்.எல் மின்குமிழ்கள் பொருத்தும் திட்டம்..!
Next post உரிய முறையில் கடமைகளை ஆற்றாத அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும்‐ரோஹண திசாநாயக்க..!