உரிய முறையில் கடமைகளை ஆற்றாத அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும்‐ரோஹண திசாநாயக்க..!
Read Time:57 Second
உரிய முறையில் கடமைகளை ஆற்றாத அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோஹண திசாநாயக்க தெரிவித்துள்ளார். செயலில் ஈடுபடாது வெறுமனே பேசிக் கொண்டிருந்த அமைச்சர்கள் தங்களது பதவிளை இழக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் தவணைக்கான பதவிப் பிரமாண நிகழ்வுகளின் போது இந்த பதவி மாற்றங்கள் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் பதவிப் பிரமாண நிகழ்வுகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating