60 வருட தமிழ் மக்களின் போராட்டத்தின் இலக்கு மாகாணசபையல்ல‐இணைந்த மாகாணமே‐த.தே.கூ..!

Read Time:2 Minute, 24 Second
60 வருடங்களாக தொடரும் தமிழ் மக்களின் போராட்டத்தின் இறுதி இலக்கு எந்தவித அதிகாரங்களுமில்லாத மாகாண சபையல்ல. வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் நிரந்தர தீர்வு என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள வடகிழக்கு இணைந்தால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வருவார் என்ற கருத்து தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தின் போத அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இணைந்த மாகாணத்திற்குள் யார் வேண்டுமானாலும் அதிகாரத்திற்கு வரலாம் அது முஸ்லிம் மகனாக இருந்தாலும் சரி.அவர் தமிழ் பேசும் சமுகத்ததைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. எந்தத்தீர்வாக இருந்தாலும் இணைந்ந வடகிழக்கிற்குள் இருக்கவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. முதலமைச்சரின் கருதின்படி மாகாண சபைதான் இறுதித்தீர்வாக கொள்ளப்படுகின்றது.மாகாண சபை முறைமை கொண்டு வரப்பட்டதே வடகிழக்கு மக்களுக்காகத்தான் ஆனால் இன்று ஏனைய மாகாண சபைகளும் உருவாக்கப்பட்டு எந்தவித அதிகாரங்களுமின்றி வெறும் பொம்மயாக காணப்படுகின்றது. எனவே மாகாண சபை தமிழ்பேசும் மக்களின் இறுதிதீர்வல்ல. இணைந்த வடகிழக்கிற்குள் காணப்படும் அதிகாரத்துடனான தீர்வே இறுதித்தீர்வாகும். எங்களிடத்தில் எந்தவித பிரதேச பாகுபாடுகளும் கிடையாது என பா.அரியநேத்திரன்
தெரிவித்துள்ளார்.
 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகத்தில் உள்ள ஈழ மாணவர்களுக்கு நடிகர் கருணாஸ் உதவி..!
Next post இரண்டு தடவைகள் இலங்கையில் கடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் கனடாவில் புகலிடம் கோரி மனுத்தாக்கல்..!