ஐரோப்பாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்து 25பேர் பலி
Read Time:50 Second
மத்திய தரைக் கடலில் உள்ள சிசிலி தீவு அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து 25 பேர் பலியானார்கள். இது பற்றி தகவல் கிடைத்ததும் இத்தாலி கடற்படை விரைந்து சென்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 12 பேரை மீட்டது. அவர்களில் 4 பேர் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மால்ட்டாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
40 பேர் வேலை தேடி ஐரோப்பாவுக்குள் திருட்டுத்தனமாக நுழைவதற்காக கள்ளத்தோணியில் பயணம் செய்த போது இந்த விபத்து நடந்தது.