மாத்தளையில் 24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
Read Time:46 Second
மாத்தளை வைத்தியசாலை வளாகத்திலிருந்து 24 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலும்புக்கூடுகள் குறித்து மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார். கட்டடம் ஒன்றை அமைக்கவென மாத்தளை வைத்தியசாலைக்கு முன்னால் கடந்த 23ம் திகதி நிலத்தை அகழ்ந்தபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating