மீண்டும் நாக பாம்புடன் இணைந்தார் கொள்ளுப்பிட்டி கேளிக்கை விடுதி நடனப் பெண்!

Read Time:1 Minute, 54 Second

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் நாகபாம்புடன் நடனமாடிய யுவதியிடமிருந்து மீட்கப்பட்ட பாம்பு, மீண்டும்  குறித்த யுவதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நிரோஷா விமலரட்ண என்ற குறித்த யுவதி நாகபாம்புடன் நடனமாடிக்கொண்டிருந்தவேளை கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, குறித்த யுவதி மீது மிருகவதைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அத்துடன் யுவதி வைத்திருந்த நாகபாம்பையும் பொலிஸார் மீட்டு தெஹிவளை மிருகக்காட்சிச்சாலைக்கு அனுப்பிவைத்தர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த யுவதி தனது பாம்பை தன்னிடமே ஒப்படைக்குமாறு வழக்குத் தொடுத்திருந்தார். இந்நிலையில், கடந்த 6ம் திகதி கொழும்பு புறக்கோட்டை நீதவான் யுவதியிடம் பாம்பை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு இணங்க நாகபாம்பு யுவதியிடம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நடன யுவதி தமது செல்லப்பிராணியான நாகபாம்பை மீண்டும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியை தெரிவிப்பதாக நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் மனைவியை மீட்டுத் தருமாறு மரத்தில் ஏறி அடம்பிடிக்கும் கணவன்..
Next post மாணவர் பிரதிநிதிகள் நால்வர் வெலிக்கந்தைக்கு திடீர் மாற்றம் மீதி 7 பேர் விடுவிப்பு