புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 46 பேர் சா/த பரீட்சைக்கு தோற்றம்!
Read Time:1 Minute, 1 Second
நடைபெற்று வரும் க.பொ.த சா/த பரீட்சையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளும் தோற்றியுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கென வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் விசேட பரீட்சை மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் புனர்வாழ்வு பெற்ற சிறுவர்கள் 46 பேர் பரீட்சைக்குத் தோற்றியுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது. பரீட்சைகளுக்குத் தேவையான வசதிகளும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்படடுள்ளதென அமைச்சு தெரிவித்துள்ளது.
Average Rating