இலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல்.. பிரையன் செனவிரட்னவை சிங்கப்பூர் நாடுகடத்தியது
இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் சிங்களவர் கலாநிதி பிரையன் செனவிரட்ன. இவர் முன்நாள் இலங்கை அதிபர் பண்டார நாயக்காவின் உறவினர் என்றும் சொல்லப்படுகிறது. நீண்ட காலமாக இலங்கை அரசின் மீது இவர் தமிழர்கள் தொடர்பாக குற்றஞ்சுமத்தி வருகிறார். இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதும், கொல்லப்படுவதற்கும் எதிராக இவர் பல ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகிறார்.
அவுஸ்திரேலிய மனித உரிமை அமைப்புகளில் அங்கம் வகிக்கும், இவரால் இலங்கை அரசுக்கு பெருத்த தலையிடி காணப்படுகிறது. சமீபத்தில் மலேசிய செல்லவிருந்த மகிந்தர், அதனை திடீரென ரத்துச் செய்தார் என்ற செய்தி அனைவராலும் அறியப்பட்ட விடயம் ஆகும்.
பிரித்தானியா போன்று, மலேசியாவில் உள்ள தமிழர்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தால் தான், மகிந்தர் மலேசியா போகவில்லை என்ற செய்தி சிங்கள மற்றும் தமிழ் ஊடகங்களில் வெளியானது. இதனால் இலங்கை அரசானது மேலும் ஆத்திரமடைந்தது.
இந் நிலையில் மலேசியாவில், தமிழ் அகதிகள் தொடர்பான மாநாடு ஒன்று நடக்கவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள, பிரையன் செனவிரட்ன சென்றுள்ளார். சிங்கப்பூர் சென்று அங்கிருந்து அவர் மலேசிய செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் வெள்ளிக்கிழமை அதிகாலை, அவர் சிங்கப்பூர் சென்ற வேளை, மலேசியா உங்களை தமது நாட்டிற்குள் அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது எனவே, நாங்களும் உங்களை திருப்பி அனுப்புகிறோம் என்று கூறி சிங்கப்பூர் அதிகாரிகள் இவரை மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.
சாதாரணமாக திருப்பி அனுப்பப்பட வேண்டிய இவரை, 10 அடி அகலமுள்ள சிறைய அறை ஒன்றில், அகதிகளோடு சேர்த்து அடைத்து வைத்துள்ளார்கள். 5 மணி நேரமாக உணவோ இல்லை நீரோ கொடுக்காமல் அடைத்து வைத்துள்ளார்கள். பின்னரே இவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இது இலங்கை அரசின் மற்றுமோர் பழிவாங்கல் என எல்லோராலும் பரவலாகப் பேசப்படுகிறது.
Average Rating