சுன்னாகம் குப்பிழானைச் சோந்த சிறுமியை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்திய நபர்!
Read Time:1 Minute, 16 Second
சுன்னாகம் குப்பிழானைச் சோந்த 15 வயது நிரம்பிய சிறுமி ஒருவர் யாழ்ப்பாணம் தனியார் பஸ் நிலையத்திலிருந்து இளைஞர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்க்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. சிறுமி தனியாக நின்ற வேளையில் வுவனியா பரவைக்குளம் பகுதியச் சோந்த 20 வயது இளைஞர் அவரை அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதைத் தொடர்ந்து பொலிசார் குறித்த இளைஞனை கைது செய்துள்ளார்கள்.
அவ் இளைஞர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் பொலிசாரினால் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப் பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற வேளையில் நேற்று தெரிவித்துள்ளார்.
Average Rating