பாராளுமன்றத்தில் சம்பந்தன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்துக்களே…

Read Time:1 Minute, 44 Second

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம்  கோரவில்லை என பாராளுமன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட  கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக் கொள்ள  முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து  அல்ல என தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட  கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என  அரியநேத்திரன் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்  தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்களின்  கருத்தாகும். சம்பந்தனின் உரையை ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக  எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற  குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுன்னாகம் குப்பிழானைச் சோந்த சிறுமியை ஏமாற்றி வல்லுறவுக்குட்படுத்திய நபர்!
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…