ராஜபக்ஷ புதல்வர்களுக்கு, றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் கிடைத்தது எவ்வாறு?
ராஜபக்ஷ புதல்வர்களுக்கு றேசிங் கார் வாங்குவதற்கு 993 லட்சம் ரூபா கிடைத்தது எவ்வாறு என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க,
றேசிங் கார்களை வரி இன்றி இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டிற்கு 2000 லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள விடயங்கள் ஏற்கனவே ராஜபக்ஷ புதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது. இதன் பின்னர் 19 றேசிங் கார்களை இறக்குமதி செய்வதற்கு திட்டம் தீர்டப்பட்டது. இந்த வரவு – செலவுத் திட்டத்தினால் பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை.
ஜனாதிபதி தமது புதல்வர்களுக்கு ஏற்பவே வரவு – செலவுத் திட்டத்தை தீட்டியுள்ளார். நாட்டில் பல இளைஞர் யுவதிகள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இவ்வாறு அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
Average Rating