வெள்ளத்திலிருந்து தப்பிய யானைகள், ரெயில் மோதி பலி!!

Read Time:1 Minute, 33 Second


காட்டு வெள்ளம் காரணமாக பொலநறுவ மாவட்டம் மின்னேரியா யானைகள் சரணலாயத்திலிருந்து வெளியேறிய யானை கூட்டமொன்று ரயில் பாதையை கடக்க முற்பட்டவேளை ரயில் மோதி இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும் இரு யானைகள் காயங்களுடன் காட்டுக்குள் சென்று விட்டதாக வன ஜீவராசிகள் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த ரயிலில் மோதியே இந்த யானைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழை வெள்ள காலத்தில் மின்னேரியா சரனாலயத்திலிருந்து காட்டு யானைகள் தங்குமிடங்களை மாற்றிக் கொள்வது வழக்கம் என்றும் அதற்கான இடப்பெயர்வின் போதே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் இடம் பெற்று சில மணி நேரத்திற்குள் உயிரிழந்த யானைகளின் வால்கள் அடையாளந்தெரியாத ஆட்களினால் நறுக்கி எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மூலம அறிய முடிகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாறையில் கடலோரம் ஒதுங்கிய கடற்பாம்புகள்…
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…