அரிசியலில் ஈடுபடுமாறு பிரதம நீதியரசருக்கு பொன்சேகா அழைப்பு..

Read Time:1 Minute, 35 Second


பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை தீவிர அரசியலில் ஈடுபடும்படியும் அவ்வாறு நடைபெறும் பட்சத்தில் அவருக்கு உதவ தான் விரும்புவதாகவும் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமாக சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளார். அரசியலில் ஈடுபட்டதையிட்டு தனக்கு மனவருத்தம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ள பொன்சேகா, தான் யாரும் கொடுத்த கயிறை விழுங்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதம நீதியரசர் அரசியலுக்கு வருவாராயின் அதுவும் யாரும் கொடுத்த கயிறை விழுங்கியதாகாது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதாக இப்போதும் கருதுவதாக குறிப்பிட்டுள்ள பொன்சேகா, அதனால், அரசியலுக்கு வந்ததையிட்டு தான் மனவருத்தப்படவில்லை எனவும் கூறியுள்ளார். ‘எனது வெற்றியை யாரோ ஒருவர் தட்டிப் பறித்ததாக நான் இப்போதும் நம்புகின்றேன்’ என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘நித்யஸ்ரீயின் கணவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்’…
Next post மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மனிஷா கொய்ராலா..