சிசுவின் சடலத்துடன் தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய தாய்..
Read Time:1 Minute, 10 Second
இந்தியாவின் தமிழக மாநிலத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில் 21பேர் இன்று நாடு திரும்பினர். இந்த குழுவில், உயிரிழந்த தனது இரண்டு மாத சிசுவுடன் இலங்கை வந்தடைந்த பெண்ணொருவரும் அடங்குகின்றார். வவுனியாவைச் சேர்ந்த மேற்படி பெண்ணின், குழந்தை, தமிழக அகதி முகாமில் வைத்து பிரசவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோய்வாய்ப்பட்டிருந்த மேற்படி சிசு, இன்று மேற்படி குழுவினர் நாடு திரும்பும் போது உயிரிழந்துள்ளது. உயிரிழந்த தனது சிசுவுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி பெண்ணை, சிசுவின் சடலத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு விமான நிலைய அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating