தாய்லாந்திலிருந்து 24 இலங்கையர்கள் நாடு கடத்தல்!
Read Time:58 Second
தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் உள்ள விடுதியொன்றில் தகராறு ஏற்படுத்தி கொண்ட 24 இலங்கை இளைஞர்கள் தாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த இளைஞர்களை விமான நிலைய புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்திய பின்னர், விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த இளைஞர்கள் பேங்கொக் நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதால் கைது செய்யப்பட்டதாக தாய்லாந்து காவற்துறையினர் இலங்கை காவற்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
Average Rating