டீல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி உயிரிழப்பு

Read Time:1 Minute, 58 Second

இந்தியா, புதுடில்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவூன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலத்த காயமுற்று இருந்த மாணவி 13 நாள் உயிருக்கு போராடி வந்தார், தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தநிலையில் உடலில் முக்கிய உறுப்புகள், மூளை செயலிழந்ததை அடுத்து மாணவி உயிரிழந்துள்ளார். இந்திய நேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு 23வயது மாணவியின் உயிர் பிரிந்துள்ளது. டெல்லியில் கடந்த 16ம் திகதி ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் இந்த மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். மாணவியை தாக்கிய அந்த கொடூர கும்பல் பலாத்காரம் செய்த பிறகு பஸ்சில் இருந்து தூக்கி வீசியது. மருத்துவ மாணவியூடன் வந்த ஆண் நண்பரையூம் அந்த கும்பல் தாக்கியது. கடுமையாக தாக்கப்பட்ட அம்மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சையால் அம்மாணவியின் உடலில் எந்தவித முன்னேற்றமுமு இல்லாமல் மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து கடந்த 26ம் திகதி சிங்கப்பூர் மவூன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் மாணவி உயிரிழந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் தமிழர்கள் மீது வழக்கு
Next post முன்னாள் புலி உறுப்பினர்களை விடுவிக்க நடவடிக்கை