பாதாள உலகக்கோஷ்டி உறுப்பினர் ‘போம்ப சிர’ கொலை!
Read Time:1 Minute, 1 Second
பாதாள உலகக்கோஷ்டியைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ‘போம்ப சிர’ என அறியப்பட்ட ஒருவர் இனந்தெரியாத குழுவினரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இரத்மலானையிலுள்ள ரயில்வே நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் தண்டவாளத்தடியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு பிள்ளையின் தந்தையான இவர் (வயது 57) களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் தப்பியோடியுள்ளதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை கைது செய்யும் முகமாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
Average Rating