இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சிவப்பு மழையின் மாதிரிகள்
Read Time:1 Minute, 19 Second
கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்த சிவப்பு மழையின் மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக இங்கிலாந்திலுள்ள காடிப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெலிகந்த பகுதியில் பெய்த சிவப்பு மழையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார். இந்த மாதிரிகள நேற்று முன்தினம் இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதற்கு முன்னர் பெய்த சிவப்பு மழையுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காகவே சிவப்பு மழையின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating