தனது கைக்குழந்தையை கொன்ற தந்தை தற்கொலை
Read Time:58 Second
தனது ஒன்றரை வயது கைக்குழந்தையை கடுமையாக துன்புறுத்தி கொலை செய்த குறித்த குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிலியந்தலை பல்லகம – காஹத்துடுவ பகுதியில் உள்ள தனது வீட்டில் குறித்த நபர் நேற்றிரவு இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையை கொலை செய்த குறித்த குழந்தையின் தந்தை சம்பவத்தை அடுத்து தப்பிச் சென்றிருந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating