“கூட்டமைப்பு” எம்பிக்கு பிடிவிறாந்து??!!
கிளிநொச்சியில் பாலியல் பலாத்காரம் சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வன்னிப் பகுதியுடன் தொடர்புடைய கூட்ட்மைப்பு எம்பி ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 15 வயதுப் பெண்னொருவரை வேலை பெற்றுத் தருவதாகக் கூறி முகவர் மூலம் கூட்டமைப்பு எம்பியிடம் அழைத்துச் சென்றதாகவும் எம்பியின் அலுவலகத்தில் வைத்து 15 வயதுப் பெண்ணை கூட்டமைப்பு எம்பி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்ததன் மூலம்இவருக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் தீவுப்பகுதியைச் சேர்ந்தவரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் முன்பு வன்னியில் ஆசிரியராக இருந்தபோது இவருடைய வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர்மீது பாலியல் வல்லுறவு புரிந்ததனால் அந்தச் சிறுமி தற்கொலை முயற்சியில் இறங்கியதாகவும் புலிகள் இயக்கத்திற்கு இவர் தனது மாணவர்களைச் சேர்த்து விடுவதாலும் இவருடைய மைத்துனர் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்ததனாலும் புலிகள் சிறுமியை எச்சரித்து அனுப்பியதாகவும் அந்தக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Average Rating