TV பார்ப்பதில் ஏற்பட்ட சர்ச்சையில் இளைஞன் தற்கொலை
தொலைக்காட்சி பார்ப்பதில் ஏற்பட்டிருந்த சர்ச்சையைத் தொடர்ந்து கோபமடைந்த செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி வீதியைச் சேர்ந்த சிவராசா சிஞ்துஜன் (வயது 17) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் காலையில் வீட்டில் இருந்த இவ் இளைஞன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார். அவ்வேளையில் தொலைக்காட்சியை போட வேண்டாம் என இவரின் அக்கா கூறியுள்ளார். பின்னர் அக்காவுக்கும் தம்பிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த வாய்ச் சண்டையைத் தொடர்ந்து அப்பாவும் இவருக்கு ஏசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த இளைஞன் மாமியின் வீட்டுக்கு சென்று 10 அலரி விதைகளை சாப்பிட்டுள்ளார். இவ்வாறு 10 அலரி விதைகளையும் சாப்பிட்டுவிட்டு மாமியிடம் கூறியுள்ளார். பின்னர் செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்று வேளையில் அவர் உயிரிழந்துள்ளார்.
Average Rating