ரிசானா நபீக்கிற்கு மரணதண்டனை நிறைவேற்றம், மனோகணேசன் கண்டனம்
திருகோணமலையைச் சேர்ந்த பணிப்பெண் ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது. வயது குறைந்த நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ரிசானா செய்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பில் தௌpவற்ற தகவல்கள் வெளியாகியூள்ளன. அவரது பராமரிப்பில் இறந்த குழந்தையின் மரணம் ஒரு கொலையா அல்லது விபத்தா என்ற சந்தேகம் உலகம் முழுக்க நிலவூகிறது. எதுவாக இருந்தாலும் வயதுவராத பருவத்தில் செய்யப்பட்டது ஒரு குற்றம் அல்ல. அதற்கு சீர்திருத்தமே நாகரீக உலகு கண்ட பிராயச்சித்தம். வயதுவராத பருவத்தில் செய்யப்பட்ட நிகழ்வை காரணமாக கொண்டு மரண தண்டனை வழங்குவது காட்டுமிராண்டித்தனம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முன்னணியின் ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மனோ கணேசன் மேலும் கூறியூள்ளதாவது, சகோதரி ரிசானாவின் படுகொலை செய்தியை கேட்டு நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது பெற்றௌரையூம்இ சகோதரர்களையூம் அதிர்ச்சி, துன்பம் ஆகியவற்றில் இருந்து எல்லாம்வல்ல அல்லா காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Average Rating