சிறுமி கற்பழிக்கப்பட்டு உயிருடன் எரிப்பு
Read Time:1 Minute, 2 Second
உத்திர பிரதேச மாநிலம் பரிதாபாத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்டுள்ளார். தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை அச்சிறுமி பலமுறை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அச்சிறுமியை தீ வைத்து எரித்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அச்சிறுமியை மருத்தவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அச்சிறுமியின் தந்தை அளித்த முறைப்பாட்டில் இளைஞரின் மாமாவை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating