குழந்தையை சுற்றி வளைத்த பாம்பு: ஹீரோவாக மாறிய தாய்

Read Time:1 Minute, 13 Second

australia-001
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் பெண் திரேஸ் கார்ட்டெர். இவருக்கு இரண்டரை வயதில் மகள் இருக்கிறாள். சில நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் பூனை சத்தம் போட்டு கொண்டே இருந்தது. அப்போது வெளியே வந்து பார்த்த திரேஸ் அதிர்ந்து போனார். குழந்தையின் வலது கையில் 6 அடி நீள மலைப்பாம்பு சுற்றிக் கொண்டிருந்தது. இதனை விரட்ட முயன்ற போது, 2 முறை குழந்தையை கடித்தது. 3வது முறை கடிக்க தலையை தூக்கியதும், திரேஸ் அதன் தலையை பிடித்து தூரத்தில் வீசி விட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதன் பிறகு விலங்கு ஆர்வலர்கள் வீட்டிற்கு வந்து மலைப்பாம்பை பிடித்து சென்றனர். தாயின் துணிச்சலான தைரியத்தை அனைவரும் பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் படங்கள்..
Next post ரொறன்ரோ சகோதரிகளின் விடுமுறையை விவகாரமாக்கிய புளோரிடாப் பொலிஸார்