தமிழ் மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்!
Read Time:1 Minute, 12 Second
தமிழர்களின் திருநாளாம் இந்த இனிய பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இன்றைய நாளில் சந்தோசம் பொங்கிட எமது வாசகப் பெருமக்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் மற்றும் அனைத்து உலகத் தமிழ் மக்களுக்கும் NITHARSANAM இணையம் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. மேலும் இந்த ஆண்டின் முதல் விசேடதினமாக இந்து மக்களால் கொண்டாடப்படும் இந்த சிறப்புமிக்க தைத்திருநாளில் தமிழ் மக்கள் அனைவரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியுடனும், ஒற்றுமையுடனும் சகல வளங்களுடனும் வாழவேண்டும் என்று எல்லாம்வல்ல சூரியபகவானை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். மீண்டும் வாசகப் பெருமக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொளவதில் எமது NITHARSANAM பெருமையடைகின்றது.
Average Rating