அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சாதித்தது இலங்கை அணி

Read Time:1 Minute, 27 Second

ANI.sri-lanka
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் துல்லியமான பந்து வீச்சினால் அவுஸ்ரேலியா அணியை இலகுவாக தோற்கடித்து இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது.ஆஸ்திரேலியா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில், முதலில் பேட் செய்த அவுஸ்ரேலியா 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் குவித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் திரிமன்னா 102 ரன்களுடனும், பெரேரா 14 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் தரங்கா ரன் எதுவும் எடுக்காமலும், தில்சன் 51 ரன்களில் அவுட் ஆனார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் 1-1 என்ற கணக்கில் சம நிலை வகிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடிய புலிகளின் “உலகத்தமிழர் இயக்கத்தின்” மீதான தடை மேலும் இரண்டு வருடங்களிற்கு நீடிப்பு
Next post யாழில் ஆமை இறைச்சிக்கு ஆசைப்பட்டவருக்கு நேர்ந்த கதி!