பிரேசிலில் பிக் ஷோ நிகழ்ச்ச்க்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அரைநிர்வாண போரட்டத்தால் பரபரப்பு!!
உலகம் முழுவதும் பிரபலம் ஆகிக்கொண்டிருக்கும் பிக் ஷோ நிகழ்ச்ச்க்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரேசில் நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில் திடீரென அரைநிர்வாண உடையோடு பெண்கள் தோன்றியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிக் ஷோ என்ற நிகழ்ச்சியில் உலகில் உள்ள பிரபலங்கள் ஒரு மிகப்பெரிய மால் கட்டிடத்தில் உள்ள கண்ணாடி அறைக்குள் இருந்து கொண்டு போட்டியிட்டுக் கொண்டு வருகின்றனர். பார்வையாளர்கள் அவர்களில் ஒருவரை வெற்றி பெற்றவர்களாக தேர்ந்தெடுப்பர்.
இந்த போட்டியை கண்ணாடி அறையில் அடைத்து வைத்து நடத்துவதால், பெண்களுக்கு சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி Femen என்ற பெண்கள் அமைப்பினர் போராடி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் திடீரென தங்களது மேலாடையை அகற்றி, போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு கூடியிருந்த மக்களும், பார்வையாளர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் பாதுகாவலர்களால் இரவு 9.30 மணியளவில் அகற்றப்பட்டார்கள். தீவிர விசாரணைக்குப் பின் அதிகாலை 2.00 மணியளவில் அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டார்கள்.
Femen என்ற அமைப்பு கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பெண்களுக்கு எதிரான நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
Average Rating