பங்களாதேஷ் ரயிலில் அடிபட்டு இறந்த கனேடிய மாணவி!
கனடாவைச் சேர்ந்த முங்கரீனா அராபின் ஷெரீன்(வயது 22) பங்களாதேஷில் டாக்கா இரயில்பாதை அருகே நடந்து சென்றபோது இரயிலில் அடிபட்டு இறந்துள்ளார். இப்பெண்ணின் உறவினரும், சடலத்தைப் பார்த்து ஷெரீனை அடையாளம் காட்டியுள்ளார். கனடாவின் வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை, கனடாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பங்களாதேஷில் இறந்ததை உறுதி செய்தது. ஜெரீன் பங்களாதேஷில் உள்ள உத்தாரா பெண்கள் மருத்துவக் கல்லூரியில் 2012 முதல் மருத்துவம் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை இவர் தன் நண்பருடன் டாக்கா இரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது திடீரென இரயிலில் சிக்கி உயிரிழந்தார். பொலிசார் ஜெரீனின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனடாவின் வெளியுறவுத்துறைத் துறையின் செய்தித் தொடர்பாளர், ஜெரீனின் குடும்பத்தாருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு பங்களாதேஷில் உள்ள கனடா தூதரகத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Average Rating