சவூதியில் இலங்கை பணிப்பெண் தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார்!
Read Time:1 Minute, 11 Second
இலங்கை பணிப் பெண்ணொருவர் சவூதி அரேபியாவில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்துக்கு முன்னர் பணிப் பெண்ணாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற கொழும்பு, புளூமென்டல் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய அங்கஸ் பெரேரா என்பரே தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்தப் பெண் தொழில் வழங்குனரினால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். றித்த பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள், எரிகாயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating