மன்னாரில் மூன்று தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சியாத் முஸ்லீம் ஆயுதக்குழு கொலை அச்சுறுத்தல்
மன்னாரில் மூன்று தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தின் மீது கடந்த வருடம் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தூண்டுதலின் பேரில் தாக்குதல் இடம்பெற்ற போது அது பற்றி செய்திகளை வெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கே கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.கொலை மிரட்டல் கடிதம் இன்று மூன்று ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தின் செய்தியாளர்களான மார்க், பெலிஸ்டஸ், லம்பேட் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தின் போது நீதிமன்னறத்திற்கு ஆதரவாகவும், அரசிற்கும், அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கு எதிராகவும் செயற்பட்டதாகவும், இஸ்ஸாம் மதத்தை கேவலப்படுத்தும் விதத்தில் செய்தி எழுதியதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இது இறுதி எச்சரிக்கை எனவும் கூறப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர்காளாகிய தங்களை இறுதியாக எச்சரிப்பதோடு ‘அல்லாவிடம் கொடுக்கப்படுவீர்கள்’ என ‘சியாத் இயக்கம்” என்ற பெயரில் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் கீழ் சியாத் இயக்கம் என்ற ஆயுதக்குழு இயங்கி வருவதாகவும், இக்குழு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பலரை படுகொலை செய்திருப்பதாகவும் மன்னார் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating