மன்மோகன் சிங்கை வம்புக்கு இழுத்த பாக். வெளியுறவு அமைச்சர்!
பாகிஸ்தானின் எரிசக்தி துறை அமைச்சராக ராஜா பர்வேஸ் அஷ்ரப் பதவி வகித்தபோது, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜா பர்வேஸ் அஷ்ரப்பை கைது செய்யும்படி, அந்நாட்டின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி நேற்று உத்தரவிட்டார்.
இந்தவிடயம் தொடர்பில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, கூறியுள்ளதாவது….
தெற்காசிய கண்டம் உள்ளிட்ட எல்லா நாடுகளிலும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மீதும் கூட சமீபத்தில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவை மிக மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகும் எனக் கூறியுள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஆசிய கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹினா ரப்பானி தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating