மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து “பாய் பிரண்டை“ கொன்ற பெண்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு இடையே வைத்து அழுத்தி, மூச்சு மூட்டச் செய்து கொலை செய்துள்ளார். வாஷிங்டனின் எவெரெட் பகுதியைச் சேர்ந்தவர் டோனா லாங்கே. 51 வயதான டோனாவும் இதே வயதான அவரது பாய் பிரண்ட்டும் சமீபத்தில் நன்றாக குடித்துவிட்டு மோதலில் ஈடுபட்டனர். அப்போது பாய்பிரண்டை கீழே தள்ளிவிட்ட டோனா, அவரது முகத்தில் தனது மார்பகங்களை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சு முட்டிய அந்த நபர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.
இதையடுத்து ஆம்புலன்சுக்கு தகவல் தந்துள்ளார் டோனா. ஆனால், அவர்கள் வந்தபோதே அந்த நபர் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் வந்து டோனாவிடம் விசாரித்தபோது தான் அந்த நபர் மார்பகங்களுக்கு இடையே வைத்து மூச்சுத் திணற வைத்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
சம்பவம் நடந்தபோது மேலும் இரு பெண்களும் அங்கிருந்துள்ளனர். அவர்களும் கடும் போதையில் இருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையையடுத்து டோனாவின் வாக்குமூலம் உறுதி செய்யப்பட்டது.
Average Rating