இலங்கையின் கண்களில் மண் தூவி தப்பித்தது ஈரானிய சரக்குக்கப்பல்
உயர்நீதிமன்றத்தின் உத்தரவின பிரகாரம் கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானிய சரக்குக்கப்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 கடல் மைலுக்கு அப்பால் தப்பிச் சென்று விட்ட ஈரானியக் கப்பலை ஐக்கிய நாடுகள் சபையின் சட்டங்களின் பிரகாரம் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய் விட்டதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கப்பலுடன் தொடர்பு கொண்டு நிறுத்துவதற்கு முயற்சித்த போதிலும், எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
எம்வி அமினா என்ற அந்தக் கப்பல், ஜேர்மனியின் டிவிபி வங்கி கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட உத்தரவுக்கு அமைய, 2012 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் 8 இந்தியர்கள் நாடுக்கு திரும்பி விட்ட நிலையில் ஈரானிய மாலுமிகளுடன் மட்டும் அது தப்பிச் சென்றுவிட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating