விமானத்தில் வந்த பொதியில் 18 மனித தலைகள்

Read Time:1 Minute, 46 Second

Ani.Devil-004
இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றில் 18 மனித தலைகள் இருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் சிகாகோவில் உள்ள ஓஹரே சர்வதேச விமான நிலையத்துக்கே இந்த பொதி வந்துள்ளது. இந்த பொதியை எக்ஸ்ரே எடுத்த போது மனித தலைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த மனித தலைகள் பதப்படுத்தப்பட்டிருந்தன. உடனடியாக அவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பொதியில் இத்தாலியின் ரோம் நகரில் இருந்து மனித உடல் உறுப்புகள் தான சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய போது மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிக்காக ரோம் நகருக்கு மனித தலைகள் அனுப்பி வைக்கப்பட்டதும், ஆராய்ந்து முடிந்ததும் அதை திருப்பி அனுப்பியதும் தெரிய வந்தது.

மேலும், உடல்களை அடக்கம் செய்யும் தனியார் கம்பெனி, அந்த மனித தலைகளை டெலிவரி எடுத்து முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும். ஆனால், சரியான ஆவணங்கள் இல்லாததால், ஏர்போர்ட்டில் குழப்பம் ஏற்பட்டது தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய ஆறு! நீந்தத் தயாரா?
Next post கிறிக்கெற் வீரர் டில்சானின் காமக் கமரா!